துலாம் ராசிக்காரர்களே நீங்கள் இந்த 2014-இல் கலவையான பலன்களை எதிர்பார்க்கலாம். ஒன்பதாம் வீட்டில் வியாழன் இருப்பதால் நீங்கள் இயற்கையிலேயே ஆன்மீக நாட்டம் உடையவராக இருந்தால், உங்களால் குடும்பத்தில் சந்தோஷமான சூழல் நிலவும். சனியும் இராகுவும் முதலாம் வீட்டில் இருப்பதால் உங்கள் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். இருப்பினும், ஜூலையில், இராகுவின் பெயர்ச்சிக்குப் பிறகு, உடல்நலப் பிரச்சினைகள் தீரும். காதல் தொடர்பான விஷயங்களுக்கு இது ஏற்ற வருடம். ஆனாலும், உங்கள் திருமண வாழ்க்கையில் சில பிரச்சினைகள் வரக்கூடும். 2014 ஜாதகக் கணிப்பின்படி முக்கியத்துவம் இல்லாத வழக்குகளை நடத்தவேண்டாம், அது உங்கள் பணத்தையும் நேரத்தையும் விரயமாக்கும். 2014-இல் தொழிலில் பிரச்சினைகள் ஏற்படக் கூடும். ஆனால், சில விஷயங்களில் பெரும் போராட்டங்களுக்குப்பின் வெற்றி கிடைக்கும். நிதிநிலைமையைப் பொறுத்தவரை 2014, ஒரு சராசரியான வருடம். மாணவர்களுக்கு உழைப்புக்கேற்ற சாதகமான பலன்கள் கிடைக்கும். வெளிநாட்டில் கல்வி கற்க விரும்புவோர்க்கு இது சாதகமான நேரம். குரங்குகளுக்கு உணவளித்து உதவுவது நன்மை தரும். அசைவ உணவு மற்றும் மதுவைத் தவிருங்கள்.
மாந்திரீகத்தில் பெரும் அளவில் ஆண்பால், பெண்பால் சார்ந்த பிரச்சனைகள் தான் முன் வைக்கப்படுகிறது. கணவன், மனைவி ஓன்று சேர்த்தல், தான் விரும்பிய பெண்ணையோ, ஆணையோ அடைய முயற்சித்தல், தனது சுயநலத்திற்காக ஒரு ஆணை ஆண்மைத் தன்மை இல்லாமல் ஆக்குதல் போன்ற பல பிரச்சனைகள் முன் வைக்கப்படுகிறது. இத்தகைய பிரச்சனைகளுக்கு ஆண், பெண் வசியம், ஆண், பெண்ணை பிரிக்கும் பேதனம் போன்ற முறைகள் கடைபிக்கப்படுகிறது. காம இயல் நூல்களான ஆதிசங்கரர், வத்தியாசனர், அதிவீரபாண்டியன் போன்றவர்கள் எழுதிய காமஇயல் நூல்களில் இத்தகைய மாந்திரீக முறைகள் ஆங்காங்கே சிதறப்பட்டுள்ளது. அவர்கள் மன்மதனையும், ரதியையும் காமத்திற்கு கடவுளாக வைத்து பல மந்திரங்கள் கூறப்பட்டுள்ளன. மாம்பூ, அசோகம் பூ, மகிழம்பூ, ஆகியவற்றை மன்மதனுக்குறிய மலர்கனைப் பூவாக கூறி மன்மதனுக்கு எவ்வாறு பிரயோகித்து காரியங்களை சாதிக்க முடியும் என்று தெளிவாக எழுதியுள்ளனர். அந்த நூல்களில் உயிரோட்டமான பல மந்திரங்கள் மற்றும் ஈடு முறைகள் உள்ளன. பொதுவாக மன்மதனின் மந்திரத்தில் லா, லூ, லோ, ஆகியவைகள் இடம்
Comments
Post a Comment