கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த 2014 மொத்தத்தில் ஒரு இலாபகரமான ஆண்டு. இந்த 2014-இல், வீட்டில் ஒரு சுமூகமான சூழ்நிலை நிலவும். ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும். இருப்பினும், உங்களுக்குச் சொல்ல விரும்பும் ஒரு ஆலோசனை என்னவெனில் நீங்கள் உங்கள் நாவைக் கட்டுப் படுத்தவேண்டும் என்பதே. மேலும், தேவையற்ற செலவினங்களைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, இரண்டாவது அரையாண்டில் உங்களுடைய காதல் மற்றும் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். 2014 ஜாதகத்தின்படி, உங்கள் தொழிலில் அசாதாரணமாக ஏதாவது சாதிப்பீர்கள். பதவி உயர்வு கிடைக்கும். 2014-இல் இன்னும் அதிக வாய்ப்புக்கள் கிடைக்கும். இருப்பினும், சனியும் இராகுவும் இரண்டாம் வீட்டில் இருக்கின்றனர். ஆகவே, பணம் சேமிப்பது என்பது சற்று சிரமமானதாக இருக்கும். ஆனாலும், ஜுலை மாதத்தில் இராகு இடம் மாறுவதால் சேமிப்புக்கு அது உதவியாயிருப்பதோடு உங்களின் உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது. 2014 ஜாதகக் கணிப்பின்படி மாணவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். முன்நெற்றியில் செந்தூரக் குங்குமம் இடுவது உங்களுக்குச் சாதகமானது.
மாந்திரீகத்தில் பெரும் அளவில் ஆண்பால், பெண்பால் சார்ந்த பிரச்சனைகள் தான் முன் வைக்கப்படுகிறது. கணவன், மனைவி ஓன்று சேர்த்தல், தான் விரும்பிய பெண்ணையோ, ஆணையோ அடைய முயற்சித்தல், தனது சுயநலத்திற்காக ஒரு ஆணை ஆண்மைத் தன்மை இல்லாமல் ஆக்குதல் போன்ற பல பிரச்சனைகள் முன் வைக்கப்படுகிறது. இத்தகைய பிரச்சனைகளுக்கு ஆண், பெண் வசியம், ஆண், பெண்ணை பிரிக்கும் பேதனம் போன்ற முறைகள் கடைபிக்கப்படுகிறது. காம இயல் நூல்களான ஆதிசங்கரர், வத்தியாசனர், அதிவீரபாண்டியன் போன்றவர்கள் எழுதிய காமஇயல் நூல்களில் இத்தகைய மாந்திரீக முறைகள் ஆங்காங்கே சிதறப்பட்டுள்ளது. அவர்கள் மன்மதனையும், ரதியையும் காமத்திற்கு கடவுளாக வைத்து பல மந்திரங்கள் கூறப்பட்டுள்ளன. மாம்பூ, அசோகம் பூ, மகிழம்பூ, ஆகியவற்றை மன்மதனுக்குறிய மலர்கனைப் பூவாக கூறி மன்மதனுக்கு எவ்வாறு பிரயோகித்து காரியங்களை சாதிக்க முடியும் என்று தெளிவாக எழுதியுள்ளனர். அந்த நூல்களில் உயிரோட்டமான பல மந்திரங்கள் மற்றும் ஈடு முறைகள் உள்ளன. பொதுவாக மன்மதனின் மந்திரத்தில் லா, லூ, லோ, ஆகியவைகள் இடம்
Comments
Post a Comment