https://www.facebook.com/balu.astro.98 நமது நாடே ஒரு “ரிஷிகளின் பூமி” அல்லது “சித்தர்களின் பூமி” என்று சொல்வது முற்றிலும் பொருத்தமானது ஆகும். இந்த நாட்டில் சித்தர்களும், முனிவர்களும், பிற எண்ணற்ற ஆன்மிகப் பெரியோர்களும் தோன்றி இந்த நாட்டின் மக்கள் மேன்மையடைய உழைத்திருக்கின்றனர். அந்த வகையில் இந்நாட்டிற்கும், இம்மக்களுக்கும் மிகுந்த நன்மைகளைக்கக்கூடிய செயல்களை இயற்றிய சித்தர்களின் தலைமை குருவான “ஸ்ரீ அகத்திய சித்தரின்”சில மகத்தான செயல்களைப் பற்றி இங்கு பார் ப்போம். “ஸ்ரீ அகத்திய முனிவரின்” தோற்றம் குறித்து பலவித கருத்துக்கள் உள்ளது. உலகின் மூத்த மொழியான “தமிழ் மொழிக்கு” எழுத்து வடிவம் கொடுத்தவராக கருதப்படுகிறார் அகத்தியர். இத்தமிழ் மொழியில் பல ஆன்மிகம், மருத்துவம், ஜோதிடம் சம்பந்தமான பாடல்களையும் இயற்றியுள்ளார். மேலும் சிவபெருமான் மனிதர்கள் பயன்படுத்தி நலம் பெற அன்னை பராசக்தியிடம் “வர்மக்கலையை” பற்றி கூற, அதை பராசக்தி அகத்தியருக்கு கூற, அவர் தனது ஓலைச் சுவடியின் மூலம் பாடலாக எழுதி இவ்வுலகிற்கு தெரிவித்தார். - Advertisement - முற்காலத்தில் தென்னகத்திலிருந்து வடஇந்திய பகுதிக்கு செல்ல