Skip to main content

பெண்ணாசை




மனிதனுக்கு இருக்க கூடாத குணங்களாக மண்ணாசை,பெண்ணாசை,பொன்னாசை என பெரியவர்கள் சொல்வார்கள்.எல்லாவற்றையும் விட ஒரு மனிதனை வீழ்த்துவது பெண்ணாசைதான்.

புராணத்தில் சொல்லப்பட்ட ராவணன்,12 உலகத்துக்கு தலைவன்,5 கிரகங்கள் உச்சம் பெற்றவன்,சிறந்த சிவ பக்தன் அப்படிபட்டவன் வீழ்ந்தது சீதை என்ற பெண்ணினால்தான்.ராமனை பழிவாங்க தூக்கிவரப்பட்ட சீதை,அவர் மீது சபலப்பட்டதால் அதாவது அடுத்தவர் மனைவி மீது ஆசைபட்டதால் நேர்மையும்,பண்பும் கொண்ட ராவணன்,எல்லா சூழ்ச்சிகளும் செய்யக்கூடிய ராமனிடம் வீழ்ந்தான்.

பெண்ணாசை கொண்ட மனிதனுக்கு,ஆபத்து நேரத்தில் யாரும்
துணை வரமாட்டார்கள்.எவ்வளவு புகழ்,செல்வாக்கு இருந்தாலும் அவனது நிலை தலைகீழாகிவிடும்.

இன்னும் சொல்லபோனால் ஒருவன் மிகப்பெரிய பிரச்சினையில் சிக்கும்போது,அவனுக்கு உதவ எல்லோரும் முன் வரும்போது,பிரச்சினையை மற்றொருவனிடம் கேட்டால் ஏதோ பெண் பிரச்சினையாம்(லேடீஸ் மேட்டர்) அப்படி என்கின்ற ஒரு வார்த்தை,அவன் பக்கம் இருக்கும் நியாயம்,நீதி,நேர்மை,புகழ் எல்லாவற்றையும் சரித்துவிடும்.உதவ வந்தவர்களும் பின் வாங்கிவிடுவார்கள்.

எதையும் எளிதாக தொடர்புகொள்ளமுடியும் இந்த காலத்தில் ஆணாக இருந்தாலும்,பெண்ணாக இருந்தாலும் சுயகட்டுபாட்டுடன் இருக்கவேண்டும்.மனதில் இருக்கும் கவலைகளையும்,சஞ்சலங்களைடும் குறைப்பதற்கு எதிர்பாலினருடன் அந்தரங்க விசயங்களை பகிர்ந்துகொள்வது நனமையை கொடுக்காது.மேற்கொண்டு தீமையைத்தான் கொடுக்கும்.

Comments

Popular posts from this blog

மாந்திரீகமும், காமமும்

                          மாந்திரீகத்தில் பெரும் அளவில் ஆண்பால், பெண்பால் சார்ந்த பிரச்சனைகள் தான் முன் வைக்கப்படுகிறது. கணவன், மனைவி ஓன்று சேர்த்தல், தான் விரும்பிய பெண்ணையோ, ஆணையோ அடைய முயற்சித்தல், தனது சுயநலத்திற்காக ஒரு ஆணை ஆண்மைத் தன்மை இல்லாமல் ஆக்குதல் போன்ற பல பிரச்சனைகள் முன் வைக்கப்படுகிறது. இத்தகைய பிரச்சனைகளுக்கு ஆண், பெண் வசியம், ஆண், பெண்ணை பிரிக்கும் பேதனம் போன்ற முறைகள் கடைபிக்கப்படுகிறது.           காம இயல் நூல்களான ஆதிசங்கரர், வத்தியாசனர், அதிவீரபாண்டியன் போன்றவர்கள் எழுதிய காமஇயல் நூல்களில் இத்தகைய மாந்திரீக முறைகள் ஆங்காங்கே சிதறப்பட்டுள்ளது. அவர்கள் மன்மதனையும்,   ரதியையும் காமத்திற்கு கடவுளாக வைத்து பல மந்திரங்கள் கூறப்பட்டுள்ளன. மாம்பூ, அசோகம் பூ, மகிழம்பூ, ஆகியவற்றை மன்மதனுக்குறிய   மலர்கனைப் பூவாக கூறி மன்மதனுக்கு எவ்வாறு பிரயோகித்து காரியங்களை சாதிக்க முடியும் என்று தெளிவாக எழுதியுள்ளனர். அந்த நூல்களில் உயிரோட்டமான பல மந்திரங்கள் மற்றும் ஈடு முறைகள் உள்ளன. பொதுவாக மன்மதனின் மந்திரத்தில் லா, லூ, லோ, ஆகியவைகள் இடம்

காதல் வெற்றிக்கு.....

காதல் வசப்படுபவர்களில் நிறைய பேர்   தங்களின் காதல் வெற்றி பெற வசியம் செய்பவர்களை தேடி செல்வதை அதிகம் பார்க்க முடிகிறது . வசியம் என்பது ஏதோ மிகப்பெரிய சக்தி   வாய்ந்தது போலவும் யாரை   வேண்டுமென்றாலும் வசியம் செய்து   விடலாம் என்பது போலவும் ஒரு   மாயை நிலவுகிறது . உண்மையில்   வசியம் செய்வதற்க்கு சில   விதி முறைகளை   ஸ்ரீ தேவி யட்சினி மகாத்மியம்   சொல்கிறது அதன்படி ...... திருமணமாகி கணவனுடன் இருக்கும் பெண்ணை வசியம் செய்ய கூடாது வேறு ஒரு ஆணுடன் காதல் வயப்பட்டபெண்ணை வசியம் செய்யகூடாது உறவு முறையற்ற பெண்ணை வசியம் செய்ய கூடாது தன்னை விட மூத்த வயதுடைய பெண்ணை வசியம் செய்ய கூடாது அடைக்கலம் தேடிவந்த பெண்ணை வசியம் செய்ய கூடாது அறிமுகம் இல்லாத பெண்னை வசியம் செய்ய முடியாது சிம்ம லக்னம் கொண்ட பெண்னை வசியம் செய்ய முடியாது வைஜயந்தி உபாசனை செய்யும் பெண்ணை வசியம் செய்ய முடியாது இத்தகைய பெண்களை தவிர்த்துத்தான் வசியத்தை பிரயோகிக்க முடியும் . அதே போல பெண்களும் . திருமணமான ஆண்களை வசியம் செய்ய

கேரள மாந்திரீக முறைகள்

           கேரள மாநிலம் ஆன்மீகத்திற்கு என்று பேர் போன்ற இடமாகும். அவர்கள் தங்கள் வாழ்க்கை நெறியை ஆன்மீகத்தோடு ஒன்றிணைத்து வாழ்பவர்கள். ஒரு காலத்தில் கேரள ஆன்மீகமும், மாந்திரீகமும் பின்னிக் கிடப்பதை நாம் காண முடியும், இந்தியாவிலேயே அதிக கல்வி கற்ற மாநிலம் என்றாலும் மாந்திரீகத்தில் நாட்டம் அதிகம் உள்ளனர். அவர்கள் ஆன்மீகத்தையும், மாந்திரீகத்தையும் மனித அறிவுக்கு அப்பாற்பட்டது என்று எண்ணி அமானுட வழக்கங்களையும்,  அமானுட நம்பிக்கைகளையும் மேற்கொள்கின்றனர். இந்த மாந்திரீக தாக்கம் அவர்களிடம் அதிகமாகவே உள்ளது. இந்த மாந்திரீகம் அன்றில் இருந்து இன்றுவரையில் அவர்கள் கலாச்சாரத்திலும், பாரம்பரியத்திலும் ஊறிகிடக்கிறது.            அவர்கள் இந்த மாந்திரீக முறைகளை ஒரு தொழில் முறைக் கலையாகவே கருதுகின்றனர். கேரளாவில்  65  சதவிகித மக்கள் கடவுள் மற்றும் மாந்திரீகத்தில் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கின்றனர். அவர்களிடம் கண்திர்ஷ்டி என்ற பார்வை மூலமாக பெறப்படும் தீய பலனை அவர்கள் நம்புகிறார்கள். அத்தகைய பார்வையினால் வரும் கண்திர்ஷ்டியை திசை திருப்ப பல இடங்களில் கொடும்பாவி பொம்மைகள் வைத்திருப்பதை கேரளாவில