Skip to main content

அங்கீகாரத்தை அவன் தருவான்!



வாழ்க்கையில் எவ்வளவு தான் கஷ்டப்பட்டாலும், என்ன தான் எழுதினாலும், பேசினாலும், வெற்றிகளைக் குவித்தாலும், அதற்கான அங்கீகாரம் மட்டும் என்னவோ சிலருக்குக் கிடைப்பதில்லை. இதுபற்றி அவர்கள் குறைபட்டுக் கொள்கின்றனர். ஆனால், எவனொருவன் நிஜமான உழைப்பாளியோ, அவனை ஆண்டவன் அங்கீகரித்தே தீருவான். இதோ... மன்னனாக வாழ்ந்தும், தன் வெற்றிக்கு அங்கீகாரம் அளிக்காத சமூகத்தை கண்டு வெறுத்த ஒருவருக்கு, ஆண்டவன் அங்கீகாரம் அளித்த கதையை கேளுங்கள்...
திருக்களந்தை என்னும் பகுதி, சோழ நாட்டில் ஒரு சிற்றரசாக இருந்தது. இந்த நகரை ஆட்சி செய்தார் கூற்றுவர்; கூற்றுவன் என்றால் எமன். யாராவது எமனுடைய பெயரை வைத்துக் கொள்வரா? உண்மையில் இவரது பெயர் இதுவல்ல. நிஜப்பெயர் யாருக்கும் தெரியவும் இல்லை. இந்த மன்னர், எதிரிகளுக்கு எமன். போர் என்று வந்து விட்டால், வெற்றி இவருக்கே! எனவே, கூற்றுவர் என்ற பெயர் இவருக்கு நிலைத்து விட்டது. சிற்றரசராக இருப்பவர், பேரரசர்களை ஜெயிக்க முடியாதா என்ன? தன் வீரத்தை வெளிப்படுத்த, சேர, சோழ, பாண்டிய நாடுகள் மீதும் படையெடுத்தார். சாதிக்கும் திறனுள்ள கூற்றுவர், மூன்று பேரரசர்களையும் தோல்வியடையச் செய்து, முப்பெரும் தேசத்திற்கும் அதிபதியானார்.
மன்னராக இருந்தாலும், வெற்றிகளைக் குவித்தாலும், சிவபக்தரான இவர், தான் இருக்கும் இடங்களில் உள்ள சிவாலயங்களுக்கு செல்லத் தவறியதில்லை. நமசிவாய என்னும் திருமந்திரம், அவரது நாவில் ஒலித்தபடியே இருக்கும். தன் வெற்றிக்கு காரணம், சிவனே என்றும், தான் பெறும் வெற்றி, சிவனுக்கே அர்ப்பணம் என்றும் சொல்வார்.
ஆனாலும், தன் தலையில் சோழ மன்னர்களுக்குரியதைப் போல் கிரீடம் சூட்ட வேண்டும் என்ற ஆசை அவர் மனதில் இருந்தது. அக்காலத்தில், சோழ மன்னர்கள், சிதம்பரம், திருச்சி உறையூர், காவிரிப்பூம்பட்டினம், திருவாரூர் ஆகிய நகரங்களிலேயே தங்களுக்கு முடிசூட்டிக் கொள்வர். தில்லைவாழ் அந்தணர்கள், அவர்களுக்கு முடிசூட்டி வைப்பது வழக்கம். எனவே, சிதம்பரத்துக்கே போய் முடிசூட்டிக் கொள்ள விரும்பினார் கூற்றுவர்.
அங்கு சென்று நடராஜப் பெருமானை வணங்கினார். சோழர்களுக்குரிய மணிமகுடத்தை தனக்கு சூட்டும்படி, அந்தணர்களிடம் கேட்டுக் கொண்டார். ஆனால், அந்தணர்களோ மறுத்து விட்டனர். காலம் காலமாக நடக்கும் ஒரு நடைமுறையை, தங்களால் மாற்ற முடியாது என்று சொல்லி விட்டனர். அதே நேரம், மூன்று தேச ராஜாக்களையும் வென்ற கூற்றுவரை பகைத்து, சிதம்பரத்தில் வாழ முடியாது என்பதும் அவர்களுக்கு தெரியும் என்பதால், சேர நாட்டுக்குச் செல்ல முடிவெடுத்தனர். சோழர் மணிமுடியை, தங்கள் வழியில் வந்த ஒரு குடும்பத்தினரிடம் ஒப்படைத்து விட்டனர்.
அந்தணர்களை, அக்கால அரசர்கள் எதற்காகவும் கட்டாயப்படுத்துவதில்லை. அது பாவம் எனக் கருதினர். இறைவனையே சரணடைவது என முடிவு செய்தார் கூற்றுவர். நடராஜ பெருமானிடம் சென்று, "இறைவா... இவ்வளவு வெற்றிகளைக் குவித்தும், ஒரு கிரீடம் அணியும் தகுதியை எனக்கு தர மறுத்து விட்டாயே... பரவாயில்லை. உ<ன் திருவடியை என் தலையில் வை... அதை விட உயர்ந்த கிரீடம் உலகில் ஏது?' என்று மன்றாடினார்.
அன்றிரவில், அவர் உறங்கிக் கொண்டிருந்த போது, தில்லையம்பல நடராஜர் அவரது கனவில் வந்து, தூக்கிய தன் திருவடியை, அவரது சிரசில் வைத்தார். திடுக்கிட்டு விழித்தார் கூற்றுவர். இறைவனே, தன் சிரசில் திருப்பாதம் வைத்தபின், வேறென்ன வேண்டும் என ஆனந்தமடைந்தார்; பரமனை பணிந்து வணங்கினார். அந்தணர்கள் செய்யாததை தில்லையம்பலத்தானே செய்த மகிழ்ச்சி அவரை ஆட்கொண்டது. அந்த மகிழ்ச்சியுடன் இன்னும் பல தேசங்களை வென்றார். கோவில் திருப்பணிகளுக்கு அள்ளிக் கொடுத்தார். பல காலம் நல்லாட்சி நடத்தி, அழியாப் புகழுடன் இறைவனுடன் கலந்தார்.
ஆண்டவனின் அங்கீகாரம் பெற்ற இவருக்கு, ஆடி திருவாதிரை நட்சத்திரத்தில் குருபூஜை நடத்தப்படும். நாயன்மார் சன்னிதியில் இவரைத் தரிசித்து, உங்கள் செயல்களுக்கும் அங்கீகாரம் வேண்டி பிரார்த்தியுங்கள்.

Comments

Popular posts from this blog

மாந்திரீகமும், காமமும்

                          மாந்திரீகத்தில் பெரும் அளவில் ஆண்பால், பெண்பால் சார்ந்த பிரச்சனைகள் தான் முன் வைக்கப்படுகிறது. கணவன், மனைவி ஓன்று சேர்த்தல், தான் விரும்பிய பெண்ணையோ, ஆணையோ அடைய முயற்சித்தல், தனது சுயநலத்திற்காக ஒரு ஆணை ஆண்மைத் தன்மை இல்லாமல் ஆக்குதல் போன்ற பல பிரச்சனைகள் முன் வைக்கப்படுகிறது. இத்தகைய பிரச்சனைகளுக்கு ஆண், பெண் வசியம், ஆண், பெண்ணை பிரிக்கும் பேதனம் போன்ற முறைகள் கடைபிக்கப்படுகிறது.           காம இயல் நூல்களான ஆதிசங்கரர், வத்தியாசனர், அதிவீரபாண்டியன் போன்றவர்கள் எழுதிய காமஇயல் நூல்களில் இத்தகைய மாந்திரீக முறைகள் ஆங்காங்கே சிதறப்பட்டுள்ளது. அவர்கள் மன்மதனையும்,   ரதியையும் காமத்திற்கு கடவுளாக வைத்து பல மந்திரங்கள் கூறப்பட்டுள்ளன. மாம்பூ, அசோகம் பூ, மகிழம்பூ, ஆகியவற்றை மன்மதனுக்குறிய   மலர்கனைப் பூவாக கூறி மன்மதனுக்கு எவ்வாறு பிரயோகித்து காரியங்களை சாதிக்க முடியும் என்று தெளிவாக எழுதியுள்ளனர். அந்த நூல்களில் உயிரோட்டமான பல மந்திரங்கள் மற்றும் ஈடு முறைகள் உள்ளன. பொதுவாக மன்மதனின் மந்திரத்தில் லா, லூ, லோ, ஆகியவைகள் இடம்

காதல் வெற்றிக்கு.....

காதல் வசப்படுபவர்களில் நிறைய பேர்   தங்களின் காதல் வெற்றி பெற வசியம் செய்பவர்களை தேடி செல்வதை அதிகம் பார்க்க முடிகிறது . வசியம் என்பது ஏதோ மிகப்பெரிய சக்தி   வாய்ந்தது போலவும் யாரை   வேண்டுமென்றாலும் வசியம் செய்து   விடலாம் என்பது போலவும் ஒரு   மாயை நிலவுகிறது . உண்மையில்   வசியம் செய்வதற்க்கு சில   விதி முறைகளை   ஸ்ரீ தேவி யட்சினி மகாத்மியம்   சொல்கிறது அதன்படி ...... திருமணமாகி கணவனுடன் இருக்கும் பெண்ணை வசியம் செய்ய கூடாது வேறு ஒரு ஆணுடன் காதல் வயப்பட்டபெண்ணை வசியம் செய்யகூடாது உறவு முறையற்ற பெண்ணை வசியம் செய்ய கூடாது தன்னை விட மூத்த வயதுடைய பெண்ணை வசியம் செய்ய கூடாது அடைக்கலம் தேடிவந்த பெண்ணை வசியம் செய்ய கூடாது அறிமுகம் இல்லாத பெண்னை வசியம் செய்ய முடியாது சிம்ம லக்னம் கொண்ட பெண்னை வசியம் செய்ய முடியாது வைஜயந்தி உபாசனை செய்யும் பெண்ணை வசியம் செய்ய முடியாது இத்தகைய பெண்களை தவிர்த்துத்தான் வசியத்தை பிரயோகிக்க முடியும் . அதே போல பெண்களும் . திருமணமான ஆண்களை வசியம் செய்ய

கேரள மாந்திரீக முறைகள்

           கேரள மாநிலம் ஆன்மீகத்திற்கு என்று பேர் போன்ற இடமாகும். அவர்கள் தங்கள் வாழ்க்கை நெறியை ஆன்மீகத்தோடு ஒன்றிணைத்து வாழ்பவர்கள். ஒரு காலத்தில் கேரள ஆன்மீகமும், மாந்திரீகமும் பின்னிக் கிடப்பதை நாம் காண முடியும், இந்தியாவிலேயே அதிக கல்வி கற்ற மாநிலம் என்றாலும் மாந்திரீகத்தில் நாட்டம் அதிகம் உள்ளனர். அவர்கள் ஆன்மீகத்தையும், மாந்திரீகத்தையும் மனித அறிவுக்கு அப்பாற்பட்டது என்று எண்ணி அமானுட வழக்கங்களையும்,  அமானுட நம்பிக்கைகளையும் மேற்கொள்கின்றனர். இந்த மாந்திரீக தாக்கம் அவர்களிடம் அதிகமாகவே உள்ளது. இந்த மாந்திரீகம் அன்றில் இருந்து இன்றுவரையில் அவர்கள் கலாச்சாரத்திலும், பாரம்பரியத்திலும் ஊறிகிடக்கிறது.            அவர்கள் இந்த மாந்திரீக முறைகளை ஒரு தொழில் முறைக் கலையாகவே கருதுகின்றனர். கேரளாவில்  65  சதவிகித மக்கள் கடவுள் மற்றும் மாந்திரீகத்தில் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கின்றனர். அவர்களிடம் கண்திர்ஷ்டி என்ற பார்வை மூலமாக பெறப்படும் தீய பலனை அவர்கள் நம்புகிறார்கள். அத்தகைய பார்வையினால் வரும் கண்திர்ஷ்டியை திசை திருப்ப பல இடங்களில் கொடும்பாவி பொம்மைகள் வைத்திருப்பதை கேரளாவில