Skip to main content

இந்தோநேஷியாவில் வழிபடப்படும் தமிழ் சித்தர் பற்றி தெரியுமா ?

நமது நாடே ஒரு “ரிஷிகளின் பூமி” அல்லது “சித்தர்களின் பூமி” என்று சொல்வது முற்றிலும் பொருத்தமானது ஆகும். இந்த நாட்டில் சித்தர்களும், முனிவர்களும், பிற எண்ணற்ற ஆன்மிகப் பெரியோர்களும் தோன்றி இந்த நாட்டின் மக்கள் மேன்மையடைய உழைத்திருக்கின்றனர். அந்த வகையில் இந்நாட்டிற்கும், இம்மக்களுக்கும் மிகுந்த நன்மைகளைக்கக்கூடிய செயல்களை இயற்றிய சித்தர்களின் தலைமை குருவான “ஸ்ரீ அகத்திய சித்தரின்”சில மகத்தான செயல்களைப் பற்றி இங்கு பார்ப்போம். “ஸ்ரீ அகத்திய முனிவரின்” தோற்றம் குறித்து பலவித கருத்துக்கள் உள்ளது. உலகின் மூத்த மொழியான “தமிழ் மொழிக்கு” எழுத்து வடிவம் கொடுத்தவராக கருதப்படுகிறார் அகத்தியர். இத்தமிழ் மொழியில் பல ஆன்மிகம், மருத்துவம், ஜோதிடம் சம்பந்தமான பாடல்களையும் இயற்றியுள்ளார். மேலும் சிவபெருமான் மனிதர்கள் பயன்படுத்தி நலம் பெற அன்னை பராசக்தியிடம் “வர்மக்கலையை” பற்றி கூற, அதை பராசக்தி அகத்தியருக்கு கூற, அவர் தனது ஓலைச் சுவடியின் மூலம் பாடலாக எழுதி இவ்வுலகிற்கு தெரிவித்தார். - Advertisement - முற்காலத்தில் தென்னகத்திலிருந்து வடஇந்திய பகுதிக்கு செல்ல வங்க கடலில் கப்பலின் மூலம் பயணித்து, வங்காளத்திற்கு சென்று அங்கிருந்து தரைவழிப்பயணமாக இமயமலை யாத்திரை சென்றனர். அதே போல் மேற்குத்திசையில் அரபிக்கடலில் கப்பலில் பயணித்து குஜராத் பகுதிக்கு சென்று, அங்கிருந்து தரைவழிப்பயணமாக வடநாட்டிற்கு பயணம் மேற்கொண்டனர். இக்காலகட்டத்தில் அகத்திய மாமுனிவர் மத்திய இந்தியாவில் இருக்கும் “விந்திய மலைகளைக்” கடந்து தென்னிந்தியாவிற்கு தரை மார்கமாக செல்லும் வழியைக் கண்டுபிடித்தார். அதே போல் அகத்திய முனிவர் வங்கக் கடலையே தீர்த்தமாக குடித்து, அதிலிருந்த அரக்கர்களை வெளியே துப்பியதாக ஒரு பாடல் உள்ளது. உண்மையில் இது ஒரு உருவகப் பாடல் ஆகும். வங்கக் கடலில் பயணிக்கும் “சோழ” மற்றும் “பாண்டிய” மன்னர்களின் கப்பலைகளைக் கொள்ளையடிக்கும் “தென்கிழக்காசிய” கடற்கொள்ளையர்களை, தனது அறிவாற்றல் மற்றும் தவசக்தியால் அகத்திய சித்தர் ஒழித்ததையே அப்பாடலில் அவ்வாறு உருவகமாக கூறியுள்ளனர். மேலும் அம்மன்னர்களின் ராஜ்ஜியம் அந்த தென்கிழக்காசிய நாடுகளான “இந்தோநேஷியா, மலேஷியா, வியட்னாம்” மற்றும் பல நாடுகளில் பரவுவதற்கும் அகத்தியர் உதவி புரிந்துள்ளார். இன்றும் அகத்தியர் அந்த நாடுகளில் ஒரு மகானாக வழிபடப்படுவதைக் காண முடியும்.

Comments

Popular posts from this blog

மாந்திரீகமும், காமமும்

                          மாந்திரீகத்தில் பெரும் அளவில் ஆண்பால், பெண்பால் சார்ந்த பிரச்சனைகள் தான் முன் வைக்கப்படுகிறது. கணவன், மனைவி ஓன்று சேர்த்தல், தான் விரும்பிய பெண்ணையோ, ஆணையோ அடைய முயற்சித்தல், தனது சுயநலத்திற்காக ஒரு ஆணை ஆண்மைத் தன்மை இல்லாமல் ஆக்குதல் போன்ற பல பிரச்சனைகள் முன் வைக்கப்படுகிறது. இத்தகைய பிரச்சனைகளுக்கு ஆண், பெண் வசியம், ஆண், பெண்ணை பிரிக்கும் பேதனம் போன்ற முறைகள் கடைபிக்கப்படுகிறது.           காம இயல் நூல்களான ஆதிசங்கரர், வத்தியாசனர், அதிவீரபாண்டியன் போன்றவர்கள் எழுதிய காமஇயல் நூல்களில் இத்தகைய மாந்திரீக முறைகள் ஆங்காங்கே சிதறப்பட்டுள்ளது. அவர்கள் மன்மதனையும்,   ரதியையும் காமத்திற்கு கடவுளாக வைத்து பல மந்திரங்கள் கூறப்பட்டுள்ளன. மாம்பூ, அசோகம் பூ, மகிழம்பூ, ஆகியவற்றை மன்மதனுக்குறிய   மலர்கனைப் பூவாக கூறி மன்மதனுக்கு எவ்வாறு பிரயோகித்து காரியங்களை சாதிக்க முடியும் என்று தெளிவாக எழுதியுள்ளனர். அந்த நூல்களில் உயிரோட்டமான பல மந்திரங்கள் மற்றும் ஈடு முறைகள் உள்ளன. பொதுவாக மன்மதனின் மந்திரத்தில் லா, லூ, லோ, ஆகியவைகள் இடம்

காதல் வெற்றிக்கு.....

காதல் வசப்படுபவர்களில் நிறைய பேர்   தங்களின் காதல் வெற்றி பெற வசியம் செய்பவர்களை தேடி செல்வதை அதிகம் பார்க்க முடிகிறது . வசியம் என்பது ஏதோ மிகப்பெரிய சக்தி   வாய்ந்தது போலவும் யாரை   வேண்டுமென்றாலும் வசியம் செய்து   விடலாம் என்பது போலவும் ஒரு   மாயை நிலவுகிறது . உண்மையில்   வசியம் செய்வதற்க்கு சில   விதி முறைகளை   ஸ்ரீ தேவி யட்சினி மகாத்மியம்   சொல்கிறது அதன்படி ...... திருமணமாகி கணவனுடன் இருக்கும் பெண்ணை வசியம் செய்ய கூடாது வேறு ஒரு ஆணுடன் காதல் வயப்பட்டபெண்ணை வசியம் செய்யகூடாது உறவு முறையற்ற பெண்ணை வசியம் செய்ய கூடாது தன்னை விட மூத்த வயதுடைய பெண்ணை வசியம் செய்ய கூடாது அடைக்கலம் தேடிவந்த பெண்ணை வசியம் செய்ய கூடாது அறிமுகம் இல்லாத பெண்னை வசியம் செய்ய முடியாது சிம்ம லக்னம் கொண்ட பெண்னை வசியம் செய்ய முடியாது வைஜயந்தி உபாசனை செய்யும் பெண்ணை வசியம் செய்ய முடியாது இத்தகைய பெண்களை தவிர்த்துத்தான் வசியத்தை பிரயோகிக்க முடியும் . அதே போல பெண்களும் . திருமணமான ஆண்களை வசியம் செய்ய

கேரள மாந்திரீக முறைகள்

           கேரள மாநிலம் ஆன்மீகத்திற்கு என்று பேர் போன்ற இடமாகும். அவர்கள் தங்கள் வாழ்க்கை நெறியை ஆன்மீகத்தோடு ஒன்றிணைத்து வாழ்பவர்கள். ஒரு காலத்தில் கேரள ஆன்மீகமும், மாந்திரீகமும் பின்னிக் கிடப்பதை நாம் காண முடியும், இந்தியாவிலேயே அதிக கல்வி கற்ற மாநிலம் என்றாலும் மாந்திரீகத்தில் நாட்டம் அதிகம் உள்ளனர். அவர்கள் ஆன்மீகத்தையும், மாந்திரீகத்தையும் மனித அறிவுக்கு அப்பாற்பட்டது என்று எண்ணி அமானுட வழக்கங்களையும்,  அமானுட நம்பிக்கைகளையும் மேற்கொள்கின்றனர். இந்த மாந்திரீக தாக்கம் அவர்களிடம் அதிகமாகவே உள்ளது. இந்த மாந்திரீகம் அன்றில் இருந்து இன்றுவரையில் அவர்கள் கலாச்சாரத்திலும், பாரம்பரியத்திலும் ஊறிகிடக்கிறது.            அவர்கள் இந்த மாந்திரீக முறைகளை ஒரு தொழில் முறைக் கலையாகவே கருதுகின்றனர். கேரளாவில்  65  சதவிகித மக்கள் கடவுள் மற்றும் மாந்திரீகத்தில் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கின்றனர். அவர்களிடம் கண்திர்ஷ்டி என்ற பார்வை மூலமாக பெறப்படும் தீய பலனை அவர்கள் நம்புகிறார்கள். அத்தகைய பார்வையினால் வரும் கண்திர்ஷ்டியை திசை திருப்ப பல இடங்களில் கொடும்பாவி பொம்மைகள் வைத்திருப்பதை கேரளாவில