Skip to main content

சித்தர்கள் சொன்ன வசியங்கள்...

மேன்மை பொருந்திய சித்தர்கள் அனைவருமே, உலக மக்கள் நெறி தவறாமல் வாழ வேண்டும் என்பதற்காக, யோக ஞானம், வைத்தியம், வாதம், சோதிடம், மாந்திரீங்கம் என்ற ஐந்து வகைக் காவியங்களை இயற்றித்தந்துள்ளனர்.

அந்த மாந்திரீக காவியத்தில் அட்டமாசித்துக்கள் என்ற பிரிவில், அட்டமா சித்துக்களை எட்டு பிரிவுகளாக பிரித்துள்ளனர்.
அவையாவன,

1. வசியம் :-
இது மற்றவர்களைத் தன் வசப்படுத்தல்.

2. மோகனம் :-
இது பிறரை தன்மீது மோகம் கொள்ளச் செய்தல்.

3. ஸ்தம்பம் :-
இது எந்த வொரு இயக்கத்தையும் அப்படியே ஸ்தம்பிக்கச் செய்வது.

4. உச்சாடனம் :-
இது தீய சக்திகள் அனைத்தையும் தன் இடம் விட்டு விரட்டுவதாகும்.

5. ஆக்ருஷணம் :-
இது துர் தேவதைகளை தன்முன் பணிய வைப்பது.

6. பேதனம் :-
இது சுயநினைவற்றுப் பேதலித்துப் போகச் செய்வது.

7. வித்வேஷணம் :-
இது ஒருவருக்கொருவர் பகையை உண்டாக்கிப் பிரிப்பது.

8. மாரணம் :-
இது உயிர்கள் அனைத்திற்கும் கேடு விளைவிப்பது.



இதிலே நாங்கள் பார்க்கப் போவது வசியம் என்பதைப் பற்றி மட்டுமே. மற்றவைகளை பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம். இந்த வசியத்தையும் எட்டுவகையாகப் பிரித்துள்ளனர். அது,
1.ஜன வசியம்.
2.ராஜ வசியம்.
3.புருஷ வசியம்.
4.ஸ்திரீ வசியம்.
5.மிருக வசியம்.
6.தேவ வசியம்.
7.சத்துரு வசியம்.
8.லோக வசியம்...ஆகியவை.

இப்படியான வசிய வேலைகளால் நாம் பிறரிடம் இருந்தோ, பிற ஜீவராசிகளிடமிருந்தோ பல நன்மைகளைப் பெற்று வாழலாம்.

அது மட்டுமல்ல இப்படி முயற்சி செய்து மேற்கொள்ளப் படும் வசியக் கலையை எந்தவொரு தவறான காரியங்களுக்கோ, மற்றவர் வாழ்வு அழிவிற்கோ பயன்படுத்தக் கூடாது. அதனால் வரும் கேடுகள் உடனடியாக இல்லாவிட்டாலும் அவரவர் காலத்திலேயே அனுபவிக்க நேரிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆகவே...

வசியக் கலையை நமது நல்வழிக்காகவும், நாம் செல்லும் நல்வழிக்கு தடங்கல் ஏற்படாமல் இருப்பதற்காகவும் பயன்படுத்தி, நாமும் வாழ்ந்து, மற்றவரையும் வாழ விடுவோம்.

Comments

  1. This is the best astrologer all his future prediction was true and correct and trusted astrologer

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மாந்திரீகமும், காமமும்

                          மாந்திரீகத்தில் பெரும் அளவில் ஆண்பால், பெண்பால் சார்ந்த பிரச்சனைகள் தான் முன் வைக்கப்படுகிறது. கணவன், மனைவி ஓன்று சேர்த்தல், தான் விரும்பிய பெண்ணையோ, ஆணையோ அடைய முயற்சித்தல், தனது சுயநலத்திற்காக ஒரு ஆணை ஆண்மைத் தன்மை இல்லாமல் ஆக்குதல் போன்ற பல பிரச்சனைகள் முன் வைக்கப்படுகிறது. இத்தகைய பிரச்சனைகளுக்கு ஆண், பெண் வசியம், ஆண், பெண்ணை பிரிக்கும் பேதனம் போன்ற முறைகள் கடைபிக்கப்படுகிறது.           காம இயல் நூல்களான ஆதிசங்கரர், வத்தியாசனர், அதிவீரபாண்டியன் போன்றவர்கள் எழுதிய காமஇயல் நூல்களில் இத்தகைய மாந்திரீக முறைகள் ஆங்காங்கே சிதறப்பட்டுள்ளது. அவர்கள் மன்மதனையும்,   ரதியையும் காமத்திற்கு கடவுளாக வைத்து பல மந்திரங்கள் கூறப்பட்டுள்ளன. மாம்பூ, அசோகம் பூ, மகிழம்பூ, ஆகியவற்றை மன்மதனுக்குறிய   மலர்கனைப் பூவாக கூறி மன்மதனுக்கு எவ்வாறு பிரயோகித்து காரியங்களை சாதிக்க முடியும் என்று தெளிவாக எழுதியுள்ளனர். அந்த நூல்களில் உயிரோட்டமான பல மந்திரங்கள் மற்றும் ஈடு முறைகள் உள்ளன. பொதுவாக மன்மதனின் மந்திரத்தில் லா, லூ, லோ, ஆகியவைகள் இடம்

காதல் வெற்றிக்கு.....

காதல் வசப்படுபவர்களில் நிறைய பேர்   தங்களின் காதல் வெற்றி பெற வசியம் செய்பவர்களை தேடி செல்வதை அதிகம் பார்க்க முடிகிறது . வசியம் என்பது ஏதோ மிகப்பெரிய சக்தி   வாய்ந்தது போலவும் யாரை   வேண்டுமென்றாலும் வசியம் செய்து   விடலாம் என்பது போலவும் ஒரு   மாயை நிலவுகிறது . உண்மையில்   வசியம் செய்வதற்க்கு சில   விதி முறைகளை   ஸ்ரீ தேவி யட்சினி மகாத்மியம்   சொல்கிறது அதன்படி ...... திருமணமாகி கணவனுடன் இருக்கும் பெண்ணை வசியம் செய்ய கூடாது வேறு ஒரு ஆணுடன் காதல் வயப்பட்டபெண்ணை வசியம் செய்யகூடாது உறவு முறையற்ற பெண்ணை வசியம் செய்ய கூடாது தன்னை விட மூத்த வயதுடைய பெண்ணை வசியம் செய்ய கூடாது அடைக்கலம் தேடிவந்த பெண்ணை வசியம் செய்ய கூடாது அறிமுகம் இல்லாத பெண்னை வசியம் செய்ய முடியாது சிம்ம லக்னம் கொண்ட பெண்னை வசியம் செய்ய முடியாது வைஜயந்தி உபாசனை செய்யும் பெண்ணை வசியம் செய்ய முடியாது இத்தகைய பெண்களை தவிர்த்துத்தான் வசியத்தை பிரயோகிக்க முடியும் . அதே போல பெண்களும் . திருமணமான ஆண்களை வசியம் செய்ய

கேரள மாந்திரீக முறைகள்

           கேரள மாநிலம் ஆன்மீகத்திற்கு என்று பேர் போன்ற இடமாகும். அவர்கள் தங்கள் வாழ்க்கை நெறியை ஆன்மீகத்தோடு ஒன்றிணைத்து வாழ்பவர்கள். ஒரு காலத்தில் கேரள ஆன்மீகமும், மாந்திரீகமும் பின்னிக் கிடப்பதை நாம் காண முடியும், இந்தியாவிலேயே அதிக கல்வி கற்ற மாநிலம் என்றாலும் மாந்திரீகத்தில் நாட்டம் அதிகம் உள்ளனர். அவர்கள் ஆன்மீகத்தையும், மாந்திரீகத்தையும் மனித அறிவுக்கு அப்பாற்பட்டது என்று எண்ணி அமானுட வழக்கங்களையும்,  அமானுட நம்பிக்கைகளையும் மேற்கொள்கின்றனர். இந்த மாந்திரீக தாக்கம் அவர்களிடம் அதிகமாகவே உள்ளது. இந்த மாந்திரீகம் அன்றில் இருந்து இன்றுவரையில் அவர்கள் கலாச்சாரத்திலும், பாரம்பரியத்திலும் ஊறிகிடக்கிறது.            அவர்கள் இந்த மாந்திரீக முறைகளை ஒரு தொழில் முறைக் கலையாகவே கருதுகின்றனர். கேரளாவில்  65  சதவிகித மக்கள் கடவுள் மற்றும் மாந்திரீகத்தில் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கின்றனர். அவர்களிடம் கண்திர்ஷ்டி என்ற பார்வை மூலமாக பெறப்படும் தீய பலனை அவர்கள் நம்புகிறார்கள். அத்தகைய பார்வையினால் வரும் கண்திர்ஷ்டியை திசை திருப்ப பல இடங்களில் கொடும்பாவி பொம்மைகள் வைத்திருப்பதை கேரளாவில