மனிதனுக்கு இருக்க கூடாத குணங்களாக மண்ணாசை,பெண்ணாசை,பொன்னாசை என பெரியவர்கள் சொல்வார்கள்.எல்லாவற்றையும் விட ஒரு மனிதனை வீழ்த்துவது பெண்ணாசைதான். புராணத்தில் சொல்லப்பட்ட ராவணன்,12 உலகத்துக்கு தலைவன்,5 கிரகங்கள் உச்சம் பெற்றவன்,சிறந்த சிவ பக்தன் அப்படிபட்டவன் வீழ்ந்தது சீதை என்ற பெண்ணினால்தான்.ராமனை பழிவாங்க தூக்கிவரப்பட்ட சீதை,அவர் மீது சபலப்பட்டதால் அதாவது அடுத்தவர் மனைவி மீது ஆசைபட்டதால் நேர்மையும்,பண்பும் கொண்ட ராவணன்,எல்லா சூழ்ச்சிகளும் செய்யக்கூடிய ராமனிடம் வீழ்ந்தான். பெண்ணாசை கொண்ட மனிதனுக்கு,ஆபத்து நேரத்தில் யாரும் துணை வரமாட்டார்கள்.எவ்வளவு புகழ்,செல்வாக்கு இருந்தாலும் அவனது நிலை தலைகீழாகிவிடும். இன்னும் சொல்லபோனால் ஒருவன் மிகப்பெரிய பிரச்சினையில் சிக்கும்போது,அவனுக்கு உதவ எல்லோரும் முன் வரும்போது,பிரச்சினையை மற்றொருவனிடம் கேட்டால் ஏதோ பெண் பிரச்சினையாம்(லேடீஸ் மேட்டர்) அப்படி என்கின்ற ஒரு வார்த்தை,அவன் பக்கம் இருக்கும் நியாயம்,நீதி,நேர்மை,புகழ் எல்லாவற்றையும் சரித்துவிடும்.உதவ வந்தவர்களும் பின் வாங்கிவிடுவார்கள். எதையும் எளிதாக தொடர்புகொள்ளமுட