இந்த புத்தாண்டு நாளில் முயற்சியுடையோர் வாழ்வில் அருளும், பொருளும் நல்கும் யந்திரம் ஒன்றினை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இந்த யந்திரம் கருவூராரால் தனது கருவூரார் மாந்திரீக காவியம் என்ற நூலில் அருளப் பட்டிருக்கிறது.தொழில் முனைவோருக்கும், செய்தொழில் வெற்றிகள் வேண்டுவோருக்கும், பொருள் தேடும் முய்ற்சியில் சுண்ங்கியிருப்போருக்கும் இந்த யந்திரம் உதவுமென்கிறார் கருவூரார். மேலே இருக்கும் படத்தில் இருக்கும் அறுங்கோனமும் அதனூடாக அமைந்திருக்கும் ஸ்ரீம் எனற எழுத்துக்களைக் கொண்ட எளிய யந்திரம்தான் இது. மையத்தில் பலன் வேண்டுவோரின் பெயரை பொறித்தால் இந்த யந்திரம் முழுமையடைந்து விடும். இந்த யந்திரத்தினை கீறும் முறையினை கருவூரார் பின்வருமாறு விளக்குகிறார். மூன்ற்ங்குல சதுரமான தங்கம் அல்லது வெள்ளி அல்லது செப்புத் தகடு இந்த யந்திரம் கீறிட உகந்தது.தகட்டில் யந்திரத்தை கீறிட செப்பாலான ஆணியினை பயன் படுத்திட வேண்டுமாம். உடல் சுத்தியுடன் கிழக்கு முகமாய் அமர்ந்து குருவினை வணங்கி இந்த யந்திரத்தை தகட்டில் கீறிட வேண்டும் என்கிறார். இவ்வாறு கீறிய தகட்டினை தாம்பாளம் ஒன்றில் பட்டுத் துணி விரித்து அதில் வைத்து